தினமுரசு  

Posted by வி.ஆர்.ஷங்கர்

https://www.youtube.com/user/MrVRSHANKAR/about

விஸ்வரூபமெடுக்கும் பாமக  

Posted by வி.ஆர்.ஷங்கர்

42 தொகுதிகளில் #திராவிட_கட்சிகளை பதம் பார்த்த #பாட்டாளி_மக்கள்_கட்சி 20,000 மேல் வாக்கு பெற்ற தொகுதிகள்
1.பாப்பிரெட்டிப்பட்டி 61,521
2.பென்னாகரம் 58,402
3.தருமபுரி 56,727
4.எடப்பாடி 56681
5.ஜெயங்கொண்டம் 52738
6.சோளிங்கர் 50,827
7.மேட்டூர் 49939
8.ஓமலுர் 48721
9.கும்மிடிப்பூண்டி- 43,055
10.விக்கிரவாண்டி 41428
11.சங்ககிரி 37927
12.செய்யார் 37,491
13.குன்னம் 37271
14.விழுப்புரம் 36,456
15.ஆர்க்காடு 35,043
16.புவனகிரி 33,681
17.திருவள்ளூர் 31,935
18.பாலக்கோடு 31,612
19.காஞ்சிபுரம் 30,102
20.சேலம் (மேற்கு) 29982
21.திண்டிவனம் (தனி) 29,848
22.திருத்தணி 29,596
23.விருத்தாச்சலம் 29,340
24.செஞ்சி 28,515
25.திருப்போரூர் 28.125
26.அரூர் (தனி) 27,747
27.வானூர் (தனி) 27,240
28.காட்டுமன்னார்கோவில் (தனி) 25,890
29.மயிலம் 25,714
30.அணைக்கட்டு 24,711
31.வந்தவாசி (தனி) 24,277
32.சிதம்பரம் 24,226
33.உத்திரமேரூர் 24,221
34.ராணிப்பேட்டை 23,850
35.கலசப்பாக்கம் 23,825 
36.ஊத்தங்கரை (தனி) 23,500
37.குறிஞ்சிப்பாடி 22,705
38.செங்கல்பட்டு 20,899
39.கீழ்பெண்ணாத்தூர் 20,737
40.பவானி 20,727
41.உளுந்தூர்பேட்டை 20,233
42.அரக்கோணம் (தனி) 20,130
#மாற்றம் #முன்னேற்றம் #அன்புமணி.........

பாஜகவின் உண்மை முகம்  

Posted by வி.ஆர்.ஷங்கர்

BJP A BIG FAILURE...
By Arunkumar

பாஜகவின் சாயம் வெளுக்க ஆரம்பித்துள்ளது. நல்ல அறிகுறியாக தெரிகிறது.

சுப்பிரமணியன் ஸ்வாமி..
யஸ்வந் சின்ஹா...
குருமூர்த்தி...

சுவாமி மற்றும் குருமூர்த்தி பாஜகவின் ஆஸ்தான ஜால்ரா கோஷ்டிகள்.... சின்ஹா பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவர்....

மூணு பேரும் ஒரே மாதிரி சொல்லியிருக்கிறார்கள்.  வேறு யாராவது சொல்லி இருந்தா கூட பக்தாஸ் ஏதாவது புழுகிக்கொண்டு இருப்பாங்க... இப்போ திருடனுக்கு தேள் கொட்டிய கதை. அப்படி என்ன சொல்லியிருக்காங்க...?

" இந்திய பொருளாதாரம்... மீட்க முடியாத அளவிற்கு வீழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது "  என்று.... ஆணித்தரமாக சொல்லிவிட்டார்கள்.

அதிலும் சின்ஹா... இன்னும் ஒருப்படி மேலே சென்று....

1. இது அணைத்து பாஜக தலைவர்களுக்கும் தெரியும். ஆனால் பயத்தில் வாயை திறக்க மறுக்கிறார்கள்.

2. GDP 5.9 வளர்ச்சி என்பது பொய். 2015 யில் மோடி அரசு அறிமுகம் செய்த, பொருளாதாரத்தை கணக்கு செய்யும் புதிய  முறை என்பது ஏமாற்று வேலை. உண்மையில் GDP 3.7 தான். பழைய முறையே சரியான முறை. என்று கிழித்து தொங்க விட்டிருக்கிறார்.... !!!

#Demonetisation படு தோல்வி என்று ஏற்கனவே ரிசர்வ் வங்கி துப்பிடுச்சு....

#Digital_transaction சுத்தமாக எடுபடவில்லை... படுத்து தூங்கிடுச்சு...

#Make_in_india வெற்றி பெற்றிருந்தால்.... GDP மேலே வந்திருக்கனும். வேலைவாய்ப்பு அதிகரித்து இருக்கவேண்டும். இந்திய கம்பனிகள் பெரிய அளவில் வளர்ச்சி  அடைந்திருக்க வேண்டும். இதில் எதுவுமே நடக்கவில்லை.  மாறாக வேலையிழப்பு அதிகமாகி உள்ளது. இந்த திட்டமும் புஸ் ஆகி விட்டது.

#GST இது தான் பக்தாஸ் சுட்ட வடையிலேயே பெரிய வடை.... இன்னும் 2 அல்லது ௩ மாசத்தில் இதன் யோக்கியதையும் தெரிந்துவிடும்.... கடைசியாக கட்ட GST வரி கட்டவேண்டிய 69 லட்சம் கம்பனிகளில் வெறும் 12 லட்சம் கம்பனிகள் தான் வரி கட்டியுள்ளது. ஆக இதும் பாதி செத்த கணக்கு தான்.

#Black_Money மீட்பு என்று சொன்னானுக.... சுவிஸ் வங்கியில் இவ்வளவு இருக்கு, அவ்வளவு இருக்கு, முழுசா மீட்போம்..அது இது ன்னு கம்பு சுற்றி, கடைசியில் மீட்பதற்கு நிறைய சட்ட சிக்கல் இருக்குன்னு கதையும் விட்டு ஊத்தி மூடிட்டாங்க.

இதுவரை பாஜக அரசு கொண்டு வந்த எந்த திட்டமும்  உருப்படியாக எதையும் சாதிக்க வில்லை என்பது தான் bottom line. தேவையில்லாத ஆணிகலான நீட், புல்லட் ட்ரைன், என்று வெறும் பாவலா மட்டுமே காட்டிக்கொண்டு இருக்கிறது மோடி அரசு என்பது கொஞ்சம் யோசித்தால் தெளிவாகவே புரியும்.

இவர்கள் இன்று பிடித்து தொங்கி கொண்டிருக்கும் ஆதார் அட்டை, FDI, GST, என்று எல்லாமே காங்கிரஸ் கொண்டுவர முற்பட்ட போது கடுமையாக எதிர்த்தவர்களும் இவர்கள் தான்.... ஆனால் இன்று தாங்கள் அறிமுகம் செய்ததை  போல் பெருமை வேறு...!!!

பாஜக மீது மிகவும் நம்பிக்கை வைத்து, ஆக்கபூர்வமான  மாற்றம் வேண்டி இந்த மோடி சர்காருக்கு வாக்களித்து, ஏமாந்து நிற்கும் இளிச்சவாயன்களில் நானும் ஒருவன்.... என்பது தான் அசிங்கம் மற்றும் வேதனை..!!

இனியாவது சுதாரித்து கொள்வோம்.... !!!

முடிந்த மட்டும் பகிருங்கள் நட்புகளே!

செய்திதுளிகள்  

Posted by வி.ஆர்.ஷங்கர்

⭕40 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறது இந்தியா

⭕உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற தமிழக விவசாயிகள் கைது

⭕மக்களின் கேள்விகளுக்கு பிரதமர் பதிலளிக்க வேண்டும் -பா.ஜ.க எம்.பி. சத்ருஹன் சின்கா

⭕புதிதாக வரி செலுத்துவோரை ஊக்குவிக்க மத்திய அரசு திட்டம் - மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி

⭕பயங்கரவாதத்திற்கு சாதி, மதம் இல்லை: துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு பேச்சு

⭕ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு முன் உற்பத்தியான சரக்குகளை விற்க டிச.31-ம் தேதி வரை அவகாசம் மத்திய அரசு

⭕உத்தரபிரதேசத்தில் கிரிக்கெட் விளையாடிய போது ஏற்பட்ட தகராறில் சிறுவன் சுட்டுக்கொலை

⭕நடிகை வித்யாபாலன் சென்ற கார் திடீர் விபத்து

⭕ஆதார் அட்டை இல்லை:மாணவனை சரமாறியாக அடித்த ஆசிரியர் கைது

⭕2017 செப்.18 வரை ரூ.3.7 லட்சம் கோடி நேரடி வரி வருவாய் வசூலிக்கப்பட்டுள்ளது: அருண் ஜெட்லி

⭕ராஜஸ்தானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 26 பேர்:போலீசார் அதிர்ச்சி

⭕ஜம்மு-காஷ்மீரில் எல்லைப்பகுதியில் ராணுவ தளபதி பிபின் ராவத்துடன் நிர்மலா சீதாராமன் ஆய்வு

⭕நெரிசல் ஏற்பட்ட ரெயில் நிலையத்திற்கு ஒரேநேரத்தில் 4 ரெயில்கள் வந்தது என அதிகாரி தகவல்

⭕மும்பையில் ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 22 பேர் உயிரிழப்பு

⭕ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதியை கொடுக்க முடியாதவர்களுக்கு புல்லட் ரெயில் கனவு சிவசேனா சாடல்

⭕இரட்டை இலை சின்னம் தொடர்பாக முதல்-அமைச்சர் அணி சார்பில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல்

⭕மும்பையில் ரெயில் நிலைய நடைமேடை மேம்பாலத்தில் நெரிசல் ஏற்பட்டதில் 15 பேர் உயிரிழப்பு

⭕அயோத்தியில் 2 ஆண்டுக்குள் ராமர் கோவில் கட்டப்படும் பாரதீய ஜனதா அமைச்சர் பேச்சு

⭕ரோஹிங்யாக்கள் விவகாரத்தில் மியான்மரை விமர்சிக்கும் பாகிஸ்தானின் இரட்டை நிலைப்பாடு வெளிப்பட்டது

⭕‘80 வயதில் வேலைக்கு விண்ணப்பிக்கிறார்’ என்ற ஜெட்லியின் பேச்சுக்கு யஷ்வந்த் சின்ஹா பதிலடி

⭕டி.டி.வி.தினகரன் கோரிக்கையை தேர்தல் கமிஷன் நிராகரித்தது

⭕ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது ஆந்திராவில் புதிய விதி, அமலுக்கு வந்தது

⭕மத்திய அரசு தவறுகளை சரி செய்யும்’ யஷ்வந்த் சின்ஹா நம்பிக்கை

⭕ஐதராபாத்தில், விமானப்படை விமானம் விழுந்து தீப்பிடித்தது விமானி உயிர் தப்பினார்

⭕நூறு நாள் வேலை திட்டத்துக்கு பட்ஜெட் நிதி ஒதுக்கீடு ரூ.20 ஆயிரம் கோடி உயர்வு

⭕லக்னோ மாநகராட்சி வாக்காளர் பட்டியலில் இருந்து வாஜ்பாய் பெயர் நீக்கம்

⭕பொருளாதாரத்தை சீர்குலைத்ததாக குற்றச்சாட்டு: யஷ்வந்த் சின்ஹாவுக்கு அருண் ஜெட்லி பதிலடி

⭕நிழல் பொருளாதாரம் இந்தியாவில் ஊழலை அதிகரித்துள்ளது உலகளவில் நாட்டின் பெயரையும் கெடுத்துள்ளது- அருண்ஜெட்லி

⭕மணிமண்டப திறப்பு விழாவுக்கு திமுக தலைவரையும் அழைப்பார்கள் என நம்புகிறோம் - பிரபு

⭕ஜெனீவாவில் வைகோவை சிங்களர்கள் தாக்க முயற்சி; முதல்-அமைச்சர் பழனிசாமி கண்டனம்

⭕சேலத்தில் நடைபெற உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்கு மாணவ மாணவிகளை அழைத்து செல்ல தடை

⭕தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலுக்கு 20 பேர் உயிரிழப்பு - ராதாகிருஷ்ணன்

⭕பத்திரிக்கையாளர்கள் மீது போலீஸ் தாக்குதல் - வைகோ கண்டனம்

⭕சிவாஜி மணிமண்டபத்தை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைக்கிறார்

⭕எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு உத்தரவு

⭕சிறிய விழாவாக நடத்தி அவமதிக்க வேண்டாம் மணி மண்டபத்தை முதல்-அமைச்சர் திறக்க வேண்டும் நடிகர் பிரபு

⭕‘இந்த அரசின் தலைவிதி ஐகோர்ட்டில் நிர்ணயிக்கப்படும்’ மு.க.ஸ்டாலின்

*உலக செய்திகள்*

⭕ஜப்பான் பாராளுமன்றம் கலைப்பு அடுத்த மாதம் நடக்கிற தேர்தலில் ஷின்ஜோ அபே ஆட்சியை தக்க வைப்பாரா?

⭕போர் பதற்றம் நிலவி வருவதால் மலேசிய மக்கள் வடகொரியா செல்ல தடை

⭕‘ஒபாமா கேர்’ ரத்து விவகாரம் டிரம்ப் புதிய முடிவு

⭕உலகப்புகழ் பெற்ற கவர்ச்சி இதழ் ‘பிளேபாய்’ நிறுவனர் மரணம்

⭕800,000 போதை மாத்திரைகளை கடத்திய ரோஹிங்யா வாலிபர்களை வங்கதேச போலீஸ் கைது செய்தது

⭕வடகொரிய எல்லையில் ரஷ்ய ராணுவம் குவிப்பு கொரிய தீபகற்பத்தில் போர்பதற்றம்

⭕நாட்டை விட்டு தப்பியோடிய ஷினவத்ரா துபாயில் இருக்கிறார்; தாய்லாந்து பிரதமர்

⭕தங்கள் நாட்டு மக்கள் வடகொரியா செல்வதற்கு தடை விதித்தது மலேசியா

⭕பிளேபாய் நாளிதழின் நிறுவனர் 91வது வயதில் மரணம்

⭕பாரபட்சமாக பேஸ்புக் செயல்படுவதாக டிரம்ப் குற்றச்சாட்டு: மார்க் சூகர்பெர்க் பதிலடி

நடிகர்கள் அரசியலுக்கு  

Posted by வி.ஆர்.ஷங்கர்

நடிகர்கள் அரசியலுக்கு வந்துதான் மக்கள் சேவை செய்யனும்னு இல்ல நேரடியாகவே  மக்கள் சேவை செய்யலாம்.ஆனா செய்யமாட்டாங்க.ஏன்னா அரசியல்ன்னா ரசிகர்கள பகடையா பயன்படுத்தலாம்.மேலும் நிதிப்பிரச்னையே எப்பவும் இருக்காது.அவ்வப்போது கட்சி நிதின்னு சொல்லி கையேந்தலாம்.தமிழ் பண்பாடு தலைவனுக்கென்று தனி அடையாளமே வைத்துள்ளது. ஆனால் அந்த அடையாளம்கூட தெரியாமல் அரசியலுக்கு வரும் நடிகர் தலைவனுக்குறிய தகுதியே இல்லாமல் தலைவன் என்று அழைக்கப்படுவார்.மற்றும் திரையில் நடிப்பதைவிட மேடையில் சிறிதளவு நடித்தாலே போதும்  ரசிகனை ஏமாற்றிவிடலாம்.ரசிகர்களை வைத்து பலகாரியங்களை சாதிக்கும்போது லாபம் மட்டுமே நடிகருக்கு.நஷ்டம் முழுவதும் ரசிகனுக்கே. அரசியலுக்கு வரேன்னு சொல்லும் நடிகர்கள் துணிவிருந்தால் அரசியலில் இறங்குவதைவிட நேரடியாக மக்கள் சேவை செய்யலாமே.

புவனகிரி எம்எல்ஏ ஆய்வு  

Posted by வி.ஆர்.ஷங்கர்