சரியாணபடி  

Posted by வி.ஆர்.ஷங்கர்

தமிழக அரசு முதியோர் உதவித் தொகையை உயர்த்தியிருப்பதை அனைவரும் இப்போது அறிவர். முன்பு மாதம் நானூறு ரூபாய் கொடுக்கப்பட்டது. பிறகு ஆயிரம் ரூபாயாக உயர்த்தித் தரப்படும் என்று தேர்தலுக்கு முன்பு வாக்குறுதி அளிக்கப்பட்டது.

சொன்னது போலவே அதிமுக ஜெயித்து ஆட்சியமைத்தது. இப்போது முதியோர் உதவித்தொகை ஆயிரம் ரூபாயாக தரப்படும் உத்தரவில் முதலமைச்சர் கையெழுத்திட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
நமக்கு பெரும் மகிழ்ச்சி.
இந்த ஆயிரம் ரூபாய் பணத்தை முன்பு அஞ்சலகங்கள் மூலம் தரப்பட்டதே அப்படிப்பட்ட முறையில் தராமல் வங்கியின் மூலம் தருவதற்க்கு பரிந்துரை செய்யப் பட்டிருப்பதாக தெரிகிறது. இது நல்ல விஷயமே.

ஆனால் பெரும் பாலான முதியோர்களுக்கு பேங்க் நடைமுறைகள் சுத்தமாகவே தெரியாது. அதானால் முதியோர்களுக்கு எளிதாக மாற்றும் வகையில் காசோலையாக தரலாமே! இது எமக்கு தோன்றிய சின்ன ஆலோசனை. அரசு கவணிக்குமா?

This entry was posted on 1:54 AM and is filed under . You can leave a response and follow any responses to this entry through the Subscribe to: Post Comments (Atom) .

0 comments